Popular Posts

Wednesday, January 9, 2013

நியு இயர் -ஹேங் ஓவர்

நியு இயர் -ஹேங் ஓவர்

க.அருள்மொழி.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும்.
'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான் ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும் தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர்
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள் கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்' என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
 
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 
                              க.அருள்மொழி.
  புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும். 
   'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

   நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது  பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான்  ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும்  தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர் 
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு  படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை  நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள்  கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்'   என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 
                              க.அருள்மொழி.
  புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும். 
   'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

   நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது  பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான்  ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும்  தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர் 
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு  படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை  நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள்  கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்'   என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 
                              க.அருள்மொழி.
  புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும். 
   'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

   நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது  பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான்  ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும்  தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர் 
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு  படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை  நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள்  கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்'   என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டு தீர்மானங்கள்!

புத்தாண்டு தீர்மானங்கள்!

க.அருள்மொழி.


2012 டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் அழியப்போகிறது என்ற புரளியால் ஏற்பட்ட பதட்டமெல்லாம் போய் அடுத்த ஆண்டை மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புகளோடும் வரவேற்கக் காத்திருக்கும் பலரும் புத்தாண்டில் செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள்.புத்தாண்டு தீர்மானங்கள் என்ற புதிய திட்டங்களின் பட்டியல் ஒவ்வொருவரிடமும் இருக்கும்.

இந்த ஆண்டாவது பெண்ணின் திருமணத்தை முடித்தாக வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவு முதல் குடிப் பழக்கத்தை குறைத்துக் கொள்வது,சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிடுவது,உடல் எடையை பராமரிக்க ஜிம்முக்குப் போவது,இதுவரை படிக்க ஆரம்பிக்காத மாணவர்கள் ஜனவரி முதல் தேதியிலிருந்து படித்து எப்படியும் பாஸ் ஆகிவிடுவது என்று மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள்.சிலர் எண்ணங்களைத் தீர்மானமாக்குகிறார்கள்.அதில் வெகு சிலரே தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.வெற்றி பெறுபவர்கள் ஓரிருவரே!

"சென்ற ஆண்டு ஜனவரி முதல் சிகரெட்டை நிறுத்திவிடுவது என்று தீர்மானம் செய்தேன்"
"அப்படியா? இந்த ஆண்டு என்ன தீர்மானம் செய்வதாக இருக்கிறீர்கள்?"
"இந்த ஆண்டும் அதே தீர்மானத்தைத்தான் எடுக்கவிருக்கிறேன்." என்ற உரையாடல் பிரசித்தம்.

இந்த புத்தாண்டு தீர்மானங்கள் ஏன் எல்லோருக்கும் வெற்றிகரமாக அமைவதில்லை? உண்மையிலேயே அந்தத் தீர்மானங்களை அந்த ஆண்டிலேயே நிறைவேற்றி விடுவது எப்படி? கீழ்க்கண்ட குறிப்புகள் உங்கள் தீர்மானம் வெற்றியடைய உதவும். இந்தக் குறிப்புகளை கடைபிடிப்பது என்பதும் உங்கள் தீர்மானமாக இருக்கட்டும்.

1.ஒரே ஒரு தீர்மானம் என்று முடிவு செய்யுங்கள்: உளவியல் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மேன் என்பவர் கூறும் ஆலோசனை என்னவென்றால் விதவிதமான நோக்கங்களைக் கொண்ட பட்டியலை வைத்துக் கொண்டு எதையும் தொடரவும் முடியாமல் முடிக்கவும் முடியாமல் தோல்வியடைய வேண்டாம். ஒரே ஒரு தீர்மானம் போதும். அதை வெற்றிகரமாக முடியுங்கள்.

2. குறிப்பிட்ட உண்மையான இலக்கை தீர்மானியுங்கள். பெரும்பாலும் நிறைய பேர் எடுக்கும் தீர்மானம் போதைப் பழக்கத்தை விடுவது.அல்லது உடல் எடையைக் குறைப்பது போன்றவைதான். ஆனால் பலரும் அதை கடைபிடிப்பதில்லை.சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு இலக்கைக் கைக் கொள்ளுங்கள்.அதில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.உறுதியான சாதிக்கக்கூடிய இலக்கை தீர்மானிக்கும்போது அதற்காக நீங்கள் எப்படி திட்டமிட்டு முடிக்க முடியும் என்ற வழியையும் கண்டுபிடிப்பீர்கள்.

3. டிசம்பர் 31ம் தேதிவரை காத்திருக்க வேண்டாம். திட்டமிடுதல் என்பது இலக்கை அடைவதற்கான முக்கிய பகுதியாகும்.வல்லுனர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், உங்கள் நடத்தையில் முக்கிய மாற்றத்தை எப்படி ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் வழிமுறையை தீர்மானியுங்கள்.அதற்கு வரக்கூடிய தடைகளையும் முன் கணிப்பு செய்யுங்கள்.இதெல்லாம் ஜனவரி 1ம்தேதிக்கு முன் செய்துவிடுங்கள்.

4. முதல் அடியை எடுத்து வையுங்கள்: ஒரேயடியாக எல்லாவற்றையும் முடித்துவிடவேண்டும் என்பதுபோல் ஆர்பாட்டமாக கிளம்பி விரைவில் சோர்ந்துவிட வேண்டாம்.உடல் எடையைக் குறைக்கிறேன் என்று முழு பட்டினி கிடந்துவிட்டு 'அய்யையோ நம்மால் முடியாது' என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு பழையபடி உடல் எடையைக் கூட்டுவது என்று போய் விடாமல் ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவதற்கு கல்லை சிறிது சிறிதாக உடைத்து எடுப்பதுபோல் உங்கள் உடல் வடிவத்தை செதுக்குங்கள். இந்த உதாரணம் உங்களின் எல்லா தீர்மானங்களுக்கும் பொருந்தும்.ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது. இந்த ஆண்டுக்கும் 365 நாட்கள் இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு நாளையும் பயன் படுத்துங்கள்.

5. தோல்வியடைந்த தீர்மானத்தை மீண்டும் எடுக்காதீர்கள்:கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் எடுத்த தீர்மானங்களை நிறைவேற்ற முடிய வில்லை என்றால் இந்த ஆண்டும் அதையே தீர்மானிக்காதீர்கள்.ஏனென்றால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான மனவலிமை அல்லது சூழல் இல்லை என்பதை அறிக. மாறாக வேறு ஒரு செயல் திட்டத்தை எடுத்து அதை இந்த ஆண்டு நிறை வேற்றுங்கள். இந்த அனுபவத்தை வைத்து மனவலிமையுடன் அடுத்த ஆண்டு முன்பு தோல்வியடைந்த பழைய தீர்மானத்தைக் கையில் எடுங்கள்.நிச்சயம் நிறைவேறும்.

6.சிறிய மாற்றங்கள் போதும்: உங்களுடைய ஆரோக்கியமற்ற சில நடவடிக்கைகளை நிறுத்திவிட தீர்மானித்திருக்கிறீர்கள் என்றால் அது நடைமுறைக்கு வர சில காலம் பிடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஏனென்றால் உங்களுடைய அந்த விரும்பத்தகாத பழக்கம் என்பது உங்களுடன் நீண்ட காலமாக 'பழகிப்' போயிருக்கிறது! இது ஒன்றும் இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியது.அதனால் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

7. சிறிய தடுமாற்றங்களால் பின் வாங்க வேண்டாம்: தீர்மானங்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்கள் புத்தாண்டு தீர்மானத்தை முற்றிலும் கைவிடக் காரணமாகி விடுகின்றன. ஒரு வேலை சில காரணங்களால் உங்கள் விரும்பத் தகாத பழக்கத்திற்கு மீண்டும் செல்ல நேரிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். இலக்கை நோக்கிச் செல்லும் பாதை எப்போதும் நேராக இருப்பதில்லை. அவை எப்போதும் சவால் நிறைந்தவைதான்.புதிய படிப்பினையைக் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

8. உங்கள் குடும்பத்தார்,நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்: நல்லதுக்கோ கெட்டதுக்கோ சுற்றமும் நட்பும் முக்கிய காரணமாக இருக்கிறது.உங்கள் தீர்மானம் வெற்றியடைய அவர்களின் முழு ஒத்துழைப்பு அவசியம்.உங்கள் இலக்கைப் அறி அவர்களிடம் விளக்கி அதற்கு உதவுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.அவர்களில் சிலருக்கு உங்களைப் போன்று ஒரே தீர்மானமாக இருந்தால் அவர்களையும் இணைத்துக் கொண்டு இலக்கை நோக்கி நடை போடுங்கள்.

9. உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்:புத்தாண்டின் ஆரம்ப நாட்களில் உங்கள் தீர்மானத்தை நோக்கிச் செல்லும்போது உற்சாகமாகவும் நம்பிக்கையுடனுமதான் இருப்பீர்கள்.ஏனென்றால் அப்போது உங்கள் நோக்கத்திற்குக் குறுக்கீடு ஏதும் இல்லாமலிருக்கலாம். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வேலையை நீங்கள் செய்தாக வேண்டும் எனும்போது சில சங்கடங்கள், சோர்வு ஏற்படக்கூடும். அப்போது எதற்காக இதை நீங்கள் செய்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன? என்பதை நினைவு படுத்திக் கொண்டு மனதில் உற்சாகத்தை நிரப்பிக் கொண்டு தொய்வின்றி சென்று இலக்கை அடைந்து விடுங்கள்.

10. இலக்கை நோக்கி செயல் பட்டுக் கொண்டே இருங்கள்: புத்தாண்டு தொடங்கி ஒரு மாதமாகி விட்டது! ஜனவரியில் இருந்த அந்த 'நெருப்பு', உற்சாகம் பிப்ரவரி மாதத்தில் இல்லை! அப்படியெல்லாம் விட்டு விடாதீர்கள்.ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் உள்ளுக்குள் உற்சாகத்தை இழந்து விடாதீர்கள்.புதிய உத்தியைக் கையாண்டு புதிய வழிகளை மேற்கொள்ளுங்கள்.ஆம்.

நீங்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவரா? மேற்சொன்ன வழி முறைகளைக் கையாண்டு அளவுக்கதிகமான குடியை விடுங்கள்.அடுத்த ஆண்டாவது டாஸ்மாக் லாபம் குறையட்டும்.

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? மன உறுதியுடன் எடையைக் குறையுங்கள்.பேருந்தில் பக்கத்தில் இருப்பவர் வசதியாக அமரட்டும்.