Popular Posts

Tuesday, April 16, 2013

கல்விச் சந்தை ...

கல்விச் சந்தை - மதிப்பெண் மட்டும் போதுமா?

- க.அருள்மொழி

சமச்சீர் கல்விக்காக சமர் பல நடத்தி உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்விதான் வழங்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லி விட்ட பிறகும் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இடையே ஒரு பனிப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.
தனியார் பள்ளிகளில்  தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா என்று சந்தேகம். இப்போது பெற்றோருக்கு எந்தப் பக்கம் போவது என்று குழப்பம்.
உள்ளூர்ப் பள்ளிகளெல்லாம் சரியில்லை, திருச்செங்கோடு, நாமக்கல், ஊட்டி, கொடைக்கானல், பள்ளிகளில் சேர்த்து விடுங்கள், உங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆவது உறுதி என்று ஒரு குரல் கேட்கிறது. இதற்கு எதிர்காலப் பலன் ஒன்று உண்டு. அதாவது, அதிக மதிப்பெண் பெற்று பெரிய வேலையில் சேர்ந்தபிறகு பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போவதால் முன்பு நான் விடுதியில் தங்கியிருந்ததுபோல்  நீங்கள் விடுதிக்குப் போங்கள் என்று பெற்றோரை அனுப்பிவிடுவதுதான்.
ஒரு காலத்தில் எட்டாக்கனியாய் இருந்த கல்வி இப்போது கரை புரண்டு ஓடுகிறது. மகிழ்ச்சி. எல்லோருக்கும் கட்டாயக் கல்வி. அடடா! இந்தக் கட்டுரையின் நோக்கம், மக்கள் தரமான கல்வி, தரமான கல்வி என்று சொல்கிறார்களே அது என்ன?   தரமில்லாத கல்வி என்பது என்ன என்பதைப் பற்றி விவாதிப்பதுதான்.
பணம் கொடுத்து வாங்கும் கல்வி தரமான கல்வி! இலவசமாகக் கிடைக்கும் கல்வி தரமற்றது. இதுதான் மக்களின் மன நிலை. ஏனென்றால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 1. அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். 2. நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.3. ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்.4. அறிவாளிகளாக இருக்கிறார்கள்.
அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்தானா என்பது ஒவ்வொரு முறையும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள், மற்றவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?
சரி மேற்கண்ட தரமான கல்வி என்பதற்கான விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் உடல் நலன் பற்றிய கேள்விக் குறி பெரிதாக எதிரே நிற்கிறது. தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளால் தரமான உடல் நலனைக் கொடுக்க முடியுமா?
மதிப்பெண், மதிப்பெண் என்று மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக்கிய பெருமை மெட்ரிகுலேஷன் பள்ளிகளையே சாரும். போட்டி உலகத்தில் மதிப்பெண் பெறாவிட்டால் மதிப்பிழந்து போவீர்கள் என்று சொல்லிப் பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி இன்னும் சொல்லப் போனால் பலாத்காரம் செய்து மதிப்பெண் பெற வைத்து மாணவப் பருவத்தைச் சீரழித்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். அவர்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்களையும் அதே போல் மதிப்பெண் பெற வைக்க வேண்டிய கட்டாயத்தை ஆசிரியர்கள் மீது அதிகாரிகளும் பெற்றோர்களும் உண்டாக்குகிறார்கள்.
அதிக மதிப்பெண் பெற வைப்பது, அதற்காக உழைப்பது என்பதெல்லாம் முற்றிலும் தவறு என்று நாம் சொல்லவில்லை. அந்த முறைதான் தவறு என்கிறோம். பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் தொடங்கி விடுவதும், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமலே பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை இரண்டாண்டு நடத்துவதும் தனியார் பள்ளிகள் செய்கின்ற அநியாயம். அடித்தளம்  இல்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். திரும்பத்திரும்பச் சொல்லிப் பழகி நினைவில் வைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை! (புரிந்து படித்து விரும்பிப் பதியச் செய்து கொள்வதல்ல.)

துல்லியமாக மனப்பாடம் செய்து திரும்ப ஒப்புவித்தால் பாராட்டு உண்டு! இணக்கமாக இல்லை என்றால் தண்டனை உண்டு.
ஓடியாட வேண்டிய பருவத்தில் படி, படி என்று முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.
காலை எழுந்தவுடன் படிப்பு........ மாலை முழுதும் விளையாட்டு என்பதைக்கூட பாடப் புத்தகத்தில் மட்டும்தான் தெரிந்து கொள்கிறார்கள். அதனைச் செயல் வடிவம் கொடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை.
பள்ளியில் விளையாட்டு வகுப்பு கால அட்டவணையில் மட்டுமே. விளையாட அனுமதியில்லை. பள்ளிவிட்டு வந்த பின்னர் பெற்றோர்கள் விடுவார்களா? காசு கொடுத்துப் படிக்க வைக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்? கொடுத்த காசுக்கு மதிப்பெண்ணைப் பெற வைக்க அவர்கள் பங்குக்கு படி, படி, என்று உயிரை எடுப்பார்கள்.
விளையாடாமல் இருப்பதானாலும், பாடச் சுமை தரும் மன அழுத்தத்தினாலும் மாணவர்கள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். விளையாட்டில் பெறும் வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதுவது போல் எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப் பக்குவம் ஏற்படுகிறது. சிறிய தோல்விகளுக்கும் துவண்டு போவதற்கும்  வாழ்க்கையையே முடித்துக் கொள்வதற்கும் மதிப்பெண் எந்திரமாய் மாணவர்களை உருவாக்கும் கல்வி முறைதான் காரணம்.
பல தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மாத வருமானம் பள்ளி சொல்லும் கட்டணத்தையும் இதர செலவுகளையும் தயக்கமின்றி செய்யத் தயங்காத அளவிற்கு இருக்கிறதா என்று பார்க்கின்றனர்.
பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கட்டண விலக்குக் கொடுத்தும், ஒரு லட்சம் பணம் கொடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு +2 தேர்வில் எங்கள் பள்ளியின் தரத்தைப் பாருங்கள் என்று விளம்பரம் செய்து, இந்த மாணவருக்குக் கொடுத்த பணத்தை மற்றவர்களிடம் பிடுங்கும் தந்திரம் தனியார் பள்ளிகளுடையது.
சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொல்வதென்னவென்றால், தன்னுடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகள் பலரும் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்பதுதான்.
அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுடைய பின்புலம், வாழ்க்கை முறை, ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி விட்டுச் சென்று தன் தந்தையுடன் கடையிலோ தாயாருடன் வீட்டில் செய்யும் கூலி வேலையிலோ உதவி செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளி, கல்வியை மட்டுமல்லாமல் உணவு உடை, பேருந்து, புத்தகம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறது. எதுவுமே இலவசமாக வந்தால் இளக்காரம்தானே? ஏதோ பள்ளிக்குப் போய் வந்தான் என்றால் சரி என்பதோடு அவர்களின் கவனம் முடிந்து விடுகிறது.
நம் மக்களின் கலாச்சாரச் சிந்தனையை இங்கே கவனிக்க வேண்டும். உழைத்துப் பெற வேண்டிய அரிசி, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இலவசமாகப் பெற வேண்டிய கல்வியைக் காசு கொடுத்து வாங்குவதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளில் காசு கொடுத்துப் படிக்க வைப்பதால் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் பேசி தன்னுடைய குழந்தையைப் பற்றி விசாரிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் இலவசம் என்பதால் அந்தப் பக்கமே தலை காட்டுவதில்லை. உண்மையில் இலவசம் என்றாலும் அது ஒவ்வொரு பெற்றோரும் மற்றோரும் கொடுக்கக் கூடிய வரிப் பணம்தானே? கல்விக்கென்றே பல பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதே? அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவாவது கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் அரசுப் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் கட்டணம் என்பது அதிகப்படியான  இரண்டாவது கட்டணம் என்ற உண்மை இவர்களுக்கு எப்போது புரியும்?

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அங்குள்ள கல்வித்தரம் பற்றியும் கழிப்பிடம், நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும், தரமும் வசதியும் சரியில்லை என்றால் கேட்டுப் பெறவும், புகார் செய்யவும், வசதிகளை ஏற்படுத்தச் செய்யவும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால், காசு கேட்கும் தனியார் பள்ளிகள் பலவற்றில் பல அடிப்படைக் குறைபாடுகள் இருந்தாலும் கல்வி தரமாக இருக்கிறது என்பதால் (இருப்பதாக நினைத்துக் கொண்டு) வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். வேலூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் சிமெண்ட் தொட்டியில் குடி நீர் என்று எழுதி வைத்திருந்தது. அதனைக் குடிக்கலாம் என்று வாயில் ஊற்றினால் கடல் நீரைப் போல உப்புக் கரித்தது. அதே பள்ளியின் கட்டடங்களுக்குக் குறுக்கே தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டை இருந்துதானே மாணவி பலியானாள்?
இது போல பல பள்ளிகளைப் பற்றி பல செய்திகள் உண்டு. குறை சொன்னால் தன் பிள்ளைகளுக்குச் சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்தில் பேசாமல் வந்து விடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இதுபற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. அடிப்படை வசதிகள் என்றால்  வகுப்பிற்கு மாதம் 1000 ரூபாய் கட்டணம் வாங்கும் பள்ளியின் வசதியும் 100 ரூபாய் வாங்கும் பள்ளியின் வசதியும் வேறுபடுவது போல் அரசுப் பள்ளிகளின் வசதிகளும் மாறுபடும்தான். வசதி இல்லை என்றாலும்  சும்மா இருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
கிராமம் முதல் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள எல்லா ஆங்கில வழிப் பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? முக்கியமாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியுமா? ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்கூட ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். பேசுவதுதான் முக்கியப் பிரச்சினை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும்தானே?
ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கில வழியில் படிப்பதைவிட ஆங்கிலோ இந்தியர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் பழகிக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியர்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் பெண்கள் எவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுகிறார்கள் தெரியுமா? அவர்கள் அறிவாளிகள் வரிசையில் வருவார்களா?
ஒழுக்கம் என்பதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அணியும் உடையைப் பற்றி நிறைய பேர் பேசுவார்கள். வெப்பப் பிரதேசத்தில் ஷூ, டை அணிந்து கொள்வது ஒழுக்கமா? அவஸ்தையா? இன்னொன்று ஆங்கிலத்தில் பேசினால் கெட்ட வார்த்தையாகத் தெரியவில்லையோ என்னவோ? ,  என்பதும்   இன்னும் பலவும்  அடிக்கடி ஆங்கில வழி  மாணவர்கள் பேசும் வார்த்தைகள்.
இன்றைக்கு டேட்டிங் என்று சொல்லி ஊர் சுற்றுவதும் யார்? இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? சில பள்ளி முதலாளிகள், தன்னுடைய பள்ளி மாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்களுடன் சேராதீர்கள். அவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள், அரசுப் பள்ளி  மாணவிகள் முறையற்ற உறவால் கர்ப்பமாகி விடுகிறார்கள் என்று நவீன தீண்டாமையைச்  சொல்லித் தருகிறார்கள். கல்விக்கட்டணம் செலுத்த முடியாதவர்களை மனிதர்களாகவே மதிக்காமல் அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்தப் புதிய  மனுவாதிகள், கல்வியில் வர்ணபேதம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
அரசுப் பள்ளிகள் பற்றிய  குற்றச்சாட்டிற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், மவுனம்தான். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. (இது அதிக சம்பளம் என்று சொல்லவில்லை.) ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தன்னுடைய அறிவையும் தகுதியையும் அதிகப்படுத்திக்கொள்ள நூல்களை வாங்கிப் படிக்கிறார்களா? என்றால், இல்லை! இதனால் இவர்களுக்கே இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதைவிட அசிங்கம் இவர்களுக்கு இல்லை.
இப்போது ஆசிரியர்களாக இருக்கும் பலரும் ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தவர்கள்தான். இவர்கள் ஏன் உயர்ந்த பதவிக்குப் போக முடியவில்லை? அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வாக முடியாமல் போன பல்லாயிரக்கணக்கான பேரும் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை. தமிழும் சரியாகத் தெரியவில்லை. பொது அறிவில் பொதுவாக அக்கறையில்லை.
இப்போது அரசு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாம். தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று புரட்சிக் கவிஞர் சொன்னது போல் தமிழ்நாட்டின் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ் இல்லாமல் போகப் போகிறது. கல்விச் சந்தையில் அரசுக்கும் தனியாருக்கும் நடக்கும் போட்டியில் விலைபோகாச் சரக்காகிப் போகுமா தமிழ்?
ஆங்கிலத்தை அறிந்து கொள்வதற்குப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டுமே தவிர பாட வழியையே மாற்றுவது பலன் தராது. தாய் மொழியை இலக்கண வகுப்பை நடத்திவிட்டுப் பிறகு பேசக் கற்றுக் கொடுப்பதில்லை. வீட்டருகில் தெலுங்கோ இந்தியோ பேசுகிறவர்கள் இருந்தால் அவர்கள் பேசுவதைக் கவனித்து நாமும் அந்த மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறோம். அதுபோலவே ஆங்கிலத்தைப் பேசுவதிலிருந்து இயல்பாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
அதை விட்டு, முதலில் எடுத்தவுடனே டென்ஸ், வாய்ஸ், என்று ஆரம்பித்தால் நம் மாணவர்களுக்கு டென்ஷனில் வாய்ஸ் வரமாட்டேன்கிறது. அயல் மொழியான ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளும் வேகத்தில் தாய் மொழியைத் தவற விட்டுவிடக் கூடாது. தாய் மொழியைக் காப்பாற்றாத தறுதலை இனமாகத் தமிழினம் தாழ்ந்துவிடக் கூடாது.

Wednesday, January 9, 2013

நியு இயர் -ஹேங் ஓவர்

நியு இயர் -ஹேங் ஓவர்

க.அருள்மொழி.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும்.
'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான் ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும் தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர்
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள் கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்' என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
 
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 
                              க.அருள்மொழி.
  புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும். 
   'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

   நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது  பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான்  ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும்  தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர் 
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு  படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை  நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள்  கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்'   என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 
                              க.அருள்மொழி.
  புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும். 
   'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

   நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது  பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான்  ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும்  தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர் 
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு  படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை  நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள்  கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்'   என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 
                              க.அருள்மொழி.
  புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும். 
   'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

   நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது  பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான்  ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும்  தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர் 
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு  படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை  நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள்  கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்'   என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டு தீர்மானங்கள்!

புத்தாண்டு தீர்மானங்கள்!

க.அருள்மொழி.


2012 டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் அழியப்போகிறது என்ற புரளியால் ஏற்பட்ட பதட்டமெல்லாம் போய் அடுத்த ஆண்டை மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புகளோடும் வரவேற்கக் காத்திருக்கும் பலரும் புத்தாண்டில் செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள்.புத்தாண்டு தீர்மானங்கள் என்ற புதிய திட்டங்களின் பட்டியல் ஒவ்வொருவரிடமும் இருக்கும்.

இந்த ஆண்டாவது பெண்ணின் திருமணத்தை முடித்தாக வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவு முதல் குடிப் பழக்கத்தை குறைத்துக் கொள்வது,சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிடுவது,உடல் எடையை பராமரிக்க ஜிம்முக்குப் போவது,இதுவரை படிக்க ஆரம்பிக்காத மாணவர்கள் ஜனவரி முதல் தேதியிலிருந்து படித்து எப்படியும் பாஸ் ஆகிவிடுவது என்று மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள்.சிலர் எண்ணங்களைத் தீர்மானமாக்குகிறார்கள்.அதில் வெகு சிலரே தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.வெற்றி பெறுபவர்கள் ஓரிருவரே!

"சென்ற ஆண்டு ஜனவரி முதல் சிகரெட்டை நிறுத்திவிடுவது என்று தீர்மானம் செய்தேன்"
"அப்படியா? இந்த ஆண்டு என்ன தீர்மானம் செய்வதாக இருக்கிறீர்கள்?"
"இந்த ஆண்டும் அதே தீர்மானத்தைத்தான் எடுக்கவிருக்கிறேன்." என்ற உரையாடல் பிரசித்தம்.

இந்த புத்தாண்டு தீர்மானங்கள் ஏன் எல்லோருக்கும் வெற்றிகரமாக அமைவதில்லை? உண்மையிலேயே அந்தத் தீர்மானங்களை அந்த ஆண்டிலேயே நிறைவேற்றி விடுவது எப்படி? கீழ்க்கண்ட குறிப்புகள் உங்கள் தீர்மானம் வெற்றியடைய உதவும். இந்தக் குறிப்புகளை கடைபிடிப்பது என்பதும் உங்கள் தீர்மானமாக இருக்கட்டும்.

1.ஒரே ஒரு தீர்மானம் என்று முடிவு செய்யுங்கள்: உளவியல் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மேன் என்பவர் கூறும் ஆலோசனை என்னவென்றால் விதவிதமான நோக்கங்களைக் கொண்ட பட்டியலை வைத்துக் கொண்டு எதையும் தொடரவும் முடியாமல் முடிக்கவும் முடியாமல் தோல்வியடைய வேண்டாம். ஒரே ஒரு தீர்மானம் போதும். அதை வெற்றிகரமாக முடியுங்கள்.

2. குறிப்பிட்ட உண்மையான இலக்கை தீர்மானியுங்கள். பெரும்பாலும் நிறைய பேர் எடுக்கும் தீர்மானம் போதைப் பழக்கத்தை விடுவது.அல்லது உடல் எடையைக் குறைப்பது போன்றவைதான். ஆனால் பலரும் அதை கடைபிடிப்பதில்லை.சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு இலக்கைக் கைக் கொள்ளுங்கள்.அதில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்.உறுதியான சாதிக்கக்கூடிய இலக்கை தீர்மானிக்கும்போது அதற்காக நீங்கள் எப்படி திட்டமிட்டு முடிக்க முடியும் என்ற வழியையும் கண்டுபிடிப்பீர்கள்.

3. டிசம்பர் 31ம் தேதிவரை காத்திருக்க வேண்டாம். திட்டமிடுதல் என்பது இலக்கை அடைவதற்கான முக்கிய பகுதியாகும்.வல்லுனர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், உங்கள் நடத்தையில் முக்கிய மாற்றத்தை எப்படி ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் வழிமுறையை தீர்மானியுங்கள்.அதற்கு வரக்கூடிய தடைகளையும் முன் கணிப்பு செய்யுங்கள்.இதெல்லாம் ஜனவரி 1ம்தேதிக்கு முன் செய்துவிடுங்கள்.

4. முதல் அடியை எடுத்து வையுங்கள்: ஒரேயடியாக எல்லாவற்றையும் முடித்துவிடவேண்டும் என்பதுபோல் ஆர்பாட்டமாக கிளம்பி விரைவில் சோர்ந்துவிட வேண்டாம்.உடல் எடையைக் குறைக்கிறேன் என்று முழு பட்டினி கிடந்துவிட்டு 'அய்யையோ நம்மால் முடியாது' என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு பழையபடி உடல் எடையைக் கூட்டுவது என்று போய் விடாமல் ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவதற்கு கல்லை சிறிது சிறிதாக உடைத்து எடுப்பதுபோல் உங்கள் உடல் வடிவத்தை செதுக்குங்கள். இந்த உதாரணம் உங்களின் எல்லா தீர்மானங்களுக்கும் பொருந்தும்.ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது. இந்த ஆண்டுக்கும் 365 நாட்கள் இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு நாளையும் பயன் படுத்துங்கள்.

5. தோல்வியடைந்த தீர்மானத்தை மீண்டும் எடுக்காதீர்கள்:கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் எடுத்த தீர்மானங்களை நிறைவேற்ற முடிய வில்லை என்றால் இந்த ஆண்டும் அதையே தீர்மானிக்காதீர்கள்.ஏனென்றால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான மனவலிமை அல்லது சூழல் இல்லை என்பதை அறிக. மாறாக வேறு ஒரு செயல் திட்டத்தை எடுத்து அதை இந்த ஆண்டு நிறை வேற்றுங்கள். இந்த அனுபவத்தை வைத்து மனவலிமையுடன் அடுத்த ஆண்டு முன்பு தோல்வியடைந்த பழைய தீர்மானத்தைக் கையில் எடுங்கள்.நிச்சயம் நிறைவேறும்.

6.சிறிய மாற்றங்கள் போதும்: உங்களுடைய ஆரோக்கியமற்ற சில நடவடிக்கைகளை நிறுத்திவிட தீர்மானித்திருக்கிறீர்கள் என்றால் அது நடைமுறைக்கு வர சில காலம் பிடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஏனென்றால் உங்களுடைய அந்த விரும்பத்தகாத பழக்கம் என்பது உங்களுடன் நீண்ட காலமாக 'பழகிப்' போயிருக்கிறது! இது ஒன்றும் இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டியது.அதனால் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

7. சிறிய தடுமாற்றங்களால் பின் வாங்க வேண்டாம்: தீர்மானங்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்கள் புத்தாண்டு தீர்மானத்தை முற்றிலும் கைவிடக் காரணமாகி விடுகின்றன. ஒரு வேலை சில காரணங்களால் உங்கள் விரும்பத் தகாத பழக்கத்திற்கு மீண்டும் செல்ல நேரிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். இலக்கை நோக்கிச் செல்லும் பாதை எப்போதும் நேராக இருப்பதில்லை. அவை எப்போதும் சவால் நிறைந்தவைதான்.புதிய படிப்பினையைக் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

8. உங்கள் குடும்பத்தார்,நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்: நல்லதுக்கோ கெட்டதுக்கோ சுற்றமும் நட்பும் முக்கிய காரணமாக இருக்கிறது.உங்கள் தீர்மானம் வெற்றியடைய அவர்களின் முழு ஒத்துழைப்பு அவசியம்.உங்கள் இலக்கைப் அறி அவர்களிடம் விளக்கி அதற்கு உதவுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.அவர்களில் சிலருக்கு உங்களைப் போன்று ஒரே தீர்மானமாக இருந்தால் அவர்களையும் இணைத்துக் கொண்டு இலக்கை நோக்கி நடை போடுங்கள்.

9. உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்:புத்தாண்டின் ஆரம்ப நாட்களில் உங்கள் தீர்மானத்தை நோக்கிச் செல்லும்போது உற்சாகமாகவும் நம்பிக்கையுடனுமதான் இருப்பீர்கள்.ஏனென்றால் அப்போது உங்கள் நோக்கத்திற்குக் குறுக்கீடு ஏதும் இல்லாமலிருக்கலாம். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வேலையை நீங்கள் செய்தாக வேண்டும் எனும்போது சில சங்கடங்கள், சோர்வு ஏற்படக்கூடும். அப்போது எதற்காக இதை நீங்கள் செய்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன? என்பதை நினைவு படுத்திக் கொண்டு மனதில் உற்சாகத்தை நிரப்பிக் கொண்டு தொய்வின்றி சென்று இலக்கை அடைந்து விடுங்கள்.

10. இலக்கை நோக்கி செயல் பட்டுக் கொண்டே இருங்கள்: புத்தாண்டு தொடங்கி ஒரு மாதமாகி விட்டது! ஜனவரியில் இருந்த அந்த 'நெருப்பு', உற்சாகம் பிப்ரவரி மாதத்தில் இல்லை! அப்படியெல்லாம் விட்டு விடாதீர்கள்.ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் உள்ளுக்குள் உற்சாகத்தை இழந்து விடாதீர்கள்.புதிய உத்தியைக் கையாண்டு புதிய வழிகளை மேற்கொள்ளுங்கள்.ஆம்.

நீங்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவரா? மேற்சொன்ன வழி முறைகளைக் கையாண்டு அளவுக்கதிகமான குடியை விடுங்கள்.அடுத்த ஆண்டாவது டாஸ்மாக் லாபம் குறையட்டும்.

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? மன உறுதியுடன் எடையைக் குறையுங்கள்.பேருந்தில் பக்கத்தில் இருப்பவர் வசதியாக அமரட்டும்.