விடுதலை வேட்கை
க.அருள்மொழி
அரசியல் விடுதலை
அந்நியனிடமிருந்து
ஆகஸ்ட் 1947 -ல்
உள்ளூர் விடுதலை எப்போது
உச்சி குடுமிகளிடமிருந்து ?
சமூக விடுதலை வேண்டும்
சங்கர மட
சனி பகவான்களிடமிருந்து
மூளைக்கு விடுதலை வேண்டும்
மூடப்பழக்கங்கங்களிடமிருந்து
பத்திரிகை பெண்ணுக்கு
விடுதலை வேண்டும்
பார்ப்பனர்களிடமிருந்து
சாமியாடும் சினிமாவிலிருந்து
சனங்களுக்கு விடுதலை வேண்டும்
சமூக நீதி திட்டங்களுக்கு
(அ)நீதி மன்றங்களிளிருந்து
விடுதலை வேண்டும்
சாதனைகள் பல செய்ய
வேத விலங்கொடித்து
விடுதலை பெற வேண்டும்
இதற்கெல்லாம்...
தமிழன் கையில்
தந்தை பெரியாரின்
விடுதலை வேண்டும்.
(10 /10 /1993 ல் வெளிவந்த 'விடுதலை' ஞாயிறு மலரில் வெளி வந்த கவிதை)
No comments:
Post a Comment