வன்கொடுமைக் கொடுவாள்
க.அருள்மொழி.
குழந்தைகளின் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை மற்ற எல்லா குற்றங்களைப்போலவே உலகமயமானதுதான்.ஆனால் எல்லா இடத்திற்கும் பொதுவான விளக்கம் என்று எதுவும் இல்லை.ஆனால் பெரியவர்களின் (Adult) ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்து குழந்தைகளிடம் பாலியல் கெடுவாளுமை (Abuse) தூண்டுகிறது.குழந்தை பாலியல் கெடுவாளுமை(child sexual abuse) என்பது குழந்தைகளின் பாலுறுப்புகளைத் தடவுதல், அசைத்தல்,வாயில் வைத்தல், விரல்களை நுழைத்தல், மற்றும் உடலுறவு கொள்ளுதல். உடல்ரீதியான தொடர்பு மட்டுமல்லாமல் உடல் தொடர்பு இல்லாமல் பாலுறுப்புகளை பார்த்தல், பாலுறவுக் காட்சிகளைப் பார்க்கச் செய்தல் பாலுறவு பற்றி பேசுதல்.ஆகியவையும் அடங்கும். குழந்தைகளிடம் கெடுவாளுமை கொள்கிறவர்களிடையே அந்தஸ்து வேறுபாடு ஏதுமில்லை. மிக மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள் கூட இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்.க.அருள்மொழி.
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மீதும் நடத்தப்படுகின்ற கெடுவாளுமைக் குற்றங்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.ஏனென்றால் அதைப்பற்றி பதிவு செய்வது குறைவாக உள்ளதும், கெடுவாளுமை என்றல் என்ன என்பதற்கான விளக்கம் தெரியாததும் காரணமாகும்.கெடுவாளுமையால் ஏற்படும் தாக்கம் ஓரிடத்தில் ஏதுமில்லாமலும் மற்றோர் இடத்தில் மிக கடுமையாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வன்செயலால் பாதிக்கப்படும் குழந்தைகள் -குறிப்பாக குடும்ப உறுப்பினர்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்களும் உடல்ரீதியான தாக்குதல் அதிகம் ஏற்பட்டவர்களும் 'பயம் பதட்டம்' (anxiety) மோசமான மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப் படுகிறார்கள்.அது அவர்கள் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு சமயங்களில் வெளிப்பட்டு துன்பத்தை உண்டாக்குகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பது அவசியம்.
கெடுவாளுமையால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
குழந்தைகளோ,வயது வந்தோரோ இனம்,கலாச்சாரம்,பொருளாதார நிலைமை,தோற்றம்,என எந்த வேறுபாடும் இல்லாமல் பாலியல் கெடுவாளுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.சிறுவர்களை விட சிறுமிகள் அதிக அளவில் கொடுமைப்படுத்தபடுகிறார்கள்.
இந்தியாவில் பாலியல் கெடுவாளுமைக்குள்ளானோர் விவரம்:
இந்தியாவில் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 மாநிலங்களை உள்ளடக்கி 12 ,446 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் அதிர்ச்சிகரமான விவரம்.
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளைப் போலவே சம அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட Tulir-CPHCSA வின் ஆய்வில் சென்னையில் உள்ள 2211 பள்ளி செல்லும் குழந்தைகள் பங்குபெற்றனர். அதில் குழந்தை பாலியல் கெடுவாளுமைக்குள்ளானோர் 42 % என்று தெரிகிறது.இங்கும் பொருளாதார பாகுபாடு இல்லாமல் கொடுமை நடந்திருப்பது தெரிகிறது. இந்த ஆய்வில் 48 % சிறுவர்களும்- 39 % சிறுமிகளும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறா
சர்வதேச அளவிலும் ஏறக்குறைய இதே அளவில் இந்தக் குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் குற்றவாளிகள் யார்? இதைப்பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு தகவல்களைத் தருகின்றன.ஆனால் அதிர்ச்சிகரமான செய்தியாக இக்குற்றத்தை செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழகும் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பழக்கமில்லாத புதியவர்களின் பங்கு இதில் குறைவாகவே இருக்கிறது. மேலும் ஆண்களே இக்குற்றத்தை அதிகம் செய்கிறார்கள். பெண்களும் இக்குற்றத்தில் ஈடுபடுவதாகப் பதிவுகள் இருக்கின்றன. பொதுவாக நினைப்பதுபோல் அல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் இக்குற்றத்தில் அதிகமாக ஈடுபடுவதில்லை.
பாலியல் கொடுமையால் ஏற்படும் விளைவுகள் என்ன?
இக்கொடுமைக்கு ஆளானோர் உளவியல் மற்றும் நடத்தைக் கோளாறுகளால் பாதிக்கப் படுகிறார்கள். இப்பாதிப்பு சாதாரண முதல் கடுமையானது வரை குறுகிய காலத்திற்கும் நீண்டகாலத்திற்கும் மாறுபட்டு உள்ளது. மன அழுத்தம்,பயம் பதட்டம்,குற்ற உணர்வு,அச்சம், பாலியல் செயல்பாடின்மை,விலகி இருத்தல்,காணாமல் போதல் என விளைவுகள் பலவகையில் இருக்கிறது.
நிகழ்வின் தன்மையைப் பொறுத்து எதிர் பாலின வெறுப்பு ,பாலுறவு விருப்பமின்மை போன்ற நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல்,
1 உண்பதில் ஒழுங்கின்மை
2 தன்னம்பிக்கைக் குறைவு.
3 உடல் இயக்கக் குறைபாடுகள்.
4 நாட்பட்ட உடல் வலி.
5 கருவுறும் மற்றும் தோற்று நோய்கள் பீடிக்கும் அபாயம்.
6 கற்றல் குறைபாடுகள்.
7 பொருட்களை உடைத்தல்,தவறாகப் பயன்படுத்தல்.
8 பருவமடைந்த பின் பாலுறவு விருப்பமின்மை.
9 குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.
10 சிறு குழந்தைகள் போல் விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல்.
11 குறிப்பிட்ட சிலருடன் இருந்து விலகி இருத்தல்.
12 தற்கொலை செய்துகொள்ளுதல்.
கெடுவாளுமையைத் தடுப்பது எப்படி?
பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.:
கொடுமைப் படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால் என்ன செய்வது?
சிகிச்சைகள்:
கொடுமைப் படுத்தப்பட்ட குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை பயன் தராது. ஒவ்வொருவரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப பல்வேறு அணுகுமுறை,மற்றும் கால அளவில் சிகிச்சை தேவை.
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பைப் பொறுத்து குணமாகும் கால அளவு மாறுபடும். ஆனால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.
'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்பார்கள். மொட்டுகளை சுட்டு விடாதீர்கள் என்று கற்பிக்க வேண்டும். மனிதன் என்று மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வான் என்று கவலையோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது.